விமான நிலைய கடையில் திருடி பிடிபட்ட ஏர் இந்தியா அதிகாரி


விமான நிலைய கடையில் திருடி பிடிபட்ட ஏர் இந்தியா அதிகாரி
x
தினத்தந்தி 23 Jun 2019 9:30 PM GMT (Updated: 23 Jun 2019 8:59 PM GMT)

விமான நிலைய கடையில் திருடிய ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் பிடிபட்டார்.

புதுடெல்லி,

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய இயக்குனராக இருப்பவர் ரோகித் பாசின். மேலும் இவர் விமானியாகவும் பணியாற்றி வருகிறார். டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ரோகித் பாசின் விமானியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்கு ரோகித் பாசின் சென்றார். அப்போது அவர் அந்த கடையில் இருந்து ஒரு பொருளை திருடியதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் பேரில் ரோகித் பாசினை ஏர் இந்தியா நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story