2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட யாரையாவது உங்களால் பிடிக்க முடிந்ததா? - காங்கிரஸ் கேள்வி


2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட யாரையாவது உங்களால் பிடிக்க முடிந்ததா? - காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 24 Jun 2019 10:14 AM GMT (Updated: 24 Jun 2019 10:14 AM GMT)

2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட யாரையாவது உங்களால் பிடிக்க முடிந்ததா? என மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி,

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றத்தில் பேசும் போது கூறியதாவது:-

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை உங்களால் சிறையில் அடைக்க முடிந்ததா?  2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட யாரையாவது உங்களால் பிடிக்க முடிந்ததா? திருடர்கள் என்று கூறி நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள், அது உண்மை என்றால் எப்படி அவர்களால் நாடாளுமன்றத்தில் தற்போது அமர்ந்திருக்க முடியும்? என கூறினார்.

Next Story