கொச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டுடன் வந்த அமெரிக்காவை சேர்ந்தவர் கைது
கொச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டுடன் வந்த அமெரிக்காவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரும்பாவூர்,
அமெரிக்க நாட்டை சேர்ந்த பரேத்பால் (வயது 42). இவர் விமானம் மூலம் அமெரிக்கா டெக்ஸாஸ் நகரில் இருந்து துபாய் வழியாக பயணம் செய்து கொச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் விமான நிலையத்தில் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பரேத்பால் என்பவரையும் சோதனை செய்தனர். மேலும் அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனையிட்டபோது அதில் ஒரு வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து பாதுகாப்பு படையினர் அவர் மீது சட்டவிரோதமாக வெடிகுண்டுகளை கடத்தி வந்ததற்காக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நெடும்பாசேரி பன்னாட்டு விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா நாட்டு தூதரகத்திடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டை சேர்ந்த பரேத்பால் (வயது 42). இவர் விமானம் மூலம் அமெரிக்கா டெக்ஸாஸ் நகரில் இருந்து துபாய் வழியாக பயணம் செய்து கொச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் விமான நிலையத்தில் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பரேத்பால் என்பவரையும் சோதனை செய்தனர். மேலும் அவர் கொண்டு வந்த உடமைகளை சோதனையிட்டபோது அதில் ஒரு வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து பாதுகாப்பு படையினர் அவர் மீது சட்டவிரோதமாக வெடிகுண்டுகளை கடத்தி வந்ததற்காக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நெடும்பாசேரி பன்னாட்டு விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா நாட்டு தூதரகத்திடமும், மத்திய உள்துறை அமைச்சகத்திடமும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story