எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்


எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்
x
தினத்தந்தி 22 July 2019 8:18 AM GMT (Updated: 22 July 2019 8:18 AM GMT)

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு, 

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது.  பாகிஸ்தானின் இத்தகைய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்,  ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 

சுந்தர்பேனி செக்டாரில் உள்ள சில கிராமங்களை குறிவைத்து மோர்டார்கள் சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இந்த விவகாரத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  கடந்த 3 தினங்களில் 2-வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறியுள்ளது.

Next Story