கேரளாவில் தமிழ் தம்பதி மீது தாக்குதல் - காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு பதிவு


கேரளாவில் தமிழ் தம்பதி மீது தாக்குதல் - காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 23 July 2019 7:45 PM GMT (Updated: 23 July 2019 7:33 PM GMT)

கேரளாவில் தமிழ் தம்பதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அம்பலவாயில் பகுதியில், தமிழ் பேசும் தம்பதியை காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆனது. அந்த வீடியோவில், தமிழ் பேசும் வாலிபரை காங்கிரஸ்காரர் தாக்குவதும், அடிப்பதை நிறுத்துமாறு தமிழ் வாலிபரின் மனைவி, காங்கிரஸ்காரரிடம் கெஞ்சுவதும், அதை சிலர் வேடிக்கை பார்ப்பதும் பதிவாகி உள்ளது. திடீரென அந்த பெண்ணிடம் திரும்பும் காங்கிரஸ்காரர், அவரை திட்டுவதும், பிறகு கன்னத்தில் அறைவதும் பதிவாகி உள்ளது. போலீசில் புகார் செய்யுமாறு பொதுமக்கள் கூறியும், அந்த தம்பதி அங்கிருந்து சென்று விட்டது.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தபோதிலும், சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆன பிறகு, நேற்றுதான் அம்பலவாயில் போலீசார், சஜிவானந்த் என்ற காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுபோல், மாநில பெண்கள் ஆணையமும் வழக்கு பதிவு செய்துள்ளது.

Next Story