கார்கில் வெற்றி தினம்: போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை


கார்கில் வெற்றி தினம்: போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை
x
தினத்தந்தி 26 July 2019 5:13 AM GMT (Updated: 26 July 2019 10:01 AM GMT)

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி,

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை, கடந்த 1999-ம் ஆண்டு  பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தது. இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கார்கில் வெற்றி தினத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கார்கில் வெற்றி தினத்தின் 20-ம் ஆண்டு விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கார்கில் போர் வெற்றி தினமான இன்று, டெல்லியில்  உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து ராணுவ வீரர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Next Story