ஆப்கானிலிருந்து மும்பைக்கு போதைப்பொருள்... பொறிவைத்து பிடித்த டெல்லி போலீஸ்...!


ஆப்கானிலிருந்து மும்பைக்கு போதைப்பொருள்... பொறிவைத்து பிடித்த டெல்லி போலீஸ்...!
x
தினத்தந்தி 26 July 2019 10:43 AM GMT (Updated: 26 July 2019 10:43 AM GMT)

நவிமும்பையில் கண்டெய்னரில் இருந்து 130 கிலோ ஹெராயின் போதைப்பொருளை டெல்லி போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஹெராயின் போதைப்பொருள் ஈரானின் பந்தர் அப்பாஸ் வழியாக மும்பைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக 200 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களுடன் 7 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இதுவரையில் ரூ. 1,320 கோடி மதிப்பிலான 330 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போதைப்பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த சிறப்பு படை போலீஸ் அதிரடியை மேற்கொண்டதில் அடுத்தடுத்து கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது.

Next Story