அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்: தமிழக சபாநாயகருக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வாபஸ்
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், தமிழக சபாநாயகருக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டது.
புதுடெல்லி,
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபாநாயகர் ப.தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் புகார் மனு அளித்தார். இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கும் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து 3 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்தது. அத்துடன், மனு மீது பதில் அளிக்குமாறு சபாநாயகர் ப.தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க.வில் நீடிப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் 3 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவர்கள் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபாநாயகர் ப.தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் புகார் மனு அளித்தார். இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கும் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து 3 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்தது. அத்துடன், மனு மீது பதில் அளிக்குமாறு சபாநாயகர் ப.தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க.வில் நீடிப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் 3 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவர்கள் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
Related Tags :
Next Story