எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் வீரமரணம்


எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய வீரர் வீரமரணம்
x
தினத்தந்தி 20 Aug 2019 9:41 AM GMT (Updated: 20 Aug 2019 9:41 AM GMT)

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எல்லையில் உள்ள நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து மோர்டார்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

காலை 11 மணியளவில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.  பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.  இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக  கடைசியாக கிடைத்த தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.  மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். 

முன்னதாக,  கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் ராஜோரி மாவட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

Next Story