ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி


ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி
x
தினத்தந்தி 24 Aug 2019 6:57 AM GMT (Updated: 24 Aug 2019 6:57 AM GMT)

ஆம்புலன்சு வராத நிலையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டு சாலையில் குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.

பர்ஹான்பூர்,

மத்திய பிரதேத்தின் பர்ஹான்பூர் பகுதியில் வசித்து வருபவர் கமலா பாய்.  இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.  இந்த நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

இதனால் அவரது கணவர் தொலைபேசி வழியே துணை செவிலியருக்கு அழைப்பு விடுத்து, எனது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.  அதனால் உடனடியாக ஆம்புலன்சு ஒன்றை அனுப்பி வையுங்கள் என தகவல் தெரிவித்து உள்ளார்.

ஆனால் நெடுநேரம் ஆகியும் ஆம்புலன்சு வரவில்லை.  இதனால் அவர் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

எனினும், அந்த பெண்ணுக்கு வழியிலேயே பிரசவ வலி அதிகரித்தது.  அவருக்கு சாலையிலேயே பெண் குழந்தை ஒன்று பிறந்தது.  இதன்பின்பு ஷாபூர் சமூகநல மையத்திற்கு கமலா பாய் மற்றும் அவரது குழந்தை கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story