மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு
x
தினத்தந்தி 18 Sep 2019 4:54 AM GMT (Updated: 18 Sep 2019 4:54 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வடைந்து காணப்பட்டது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.  சென்செக்ஸ் குறியீடு 186.94 புள்ளிகள் உயர்ந்து 36,668.03 புள்ளிகளுடன் வர்த்தகம் நடந்தது.  இதனால் ஆற்றல் துறை மற்றும் வங்கி பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.

இதேபோன்று நிப்டி குறியீடு 43.15 புள்ளிகள் உயர்ந்து 10,860.75 புள்ளிகளாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறுவதில் முன்னேற்ற நிலை மற்றும் மீண்டு வந்த எண்ணெய் விலை ஆகியவற்றால் சந்தை நிலவரம் உயர்வுடன் காணப்படுகிறது என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Next Story