ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் : சி.ஆர்.பி.எப் வீரர்கள் 6 பேர் காயம்


ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் : சி.ஆர்.பி.எப் வீரர்கள் 6 பேர் காயம்
x
தினத்தந்தி 26 Oct 2019 2:47 PM GMT (Updated: 26 Oct 2019 2:47 PM GMT)

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள கரண்நகர் பகுதியில், சோதனைச்சாவடி ஒன்றில் பணியாற்றிக்கொண்டு இருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது  பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.

கையெறி குண்டுகள் வீசப்பட்டதில், 6 சி.ஆர்.பி.எப் வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர். கையெறி குண்டுகள் வீசப்பட்டதும், பதில் நடவடிக்கையாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. 


Next Story