ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது- அசோக் கெலாட் எச்சரிக்கை


ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது- அசோக் கெலாட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 Oct 2019 8:35 AM GMT (Updated: 31 Oct 2019 8:35 AM GMT)

ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெய்ப்பூர், 

இந்தியா ஒரு கட்சி ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான்  முதல் மந்திரி அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது:- பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள், தாங்கள் ஜனநாயகத்தை நம்பாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்பதை உணரவேண்டும். 

இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டை அவர்கள் (பாஜக)  வழிநடத்தி வருகின்றனர். சீனாவைப்போல ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார். 

Next Story