பிறந்த நாளையொட்டி நேரு நினைவிடத்தில் மன்மோகன் சிங், சோனியா மரியாதை
நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
புதுடெல்லி,
நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடியும் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
நேருவின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்திவனத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைப்போல காங்கிரஸ் எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் ஏராளமான தொண்டர்களும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நேருவுக்கு மரியாதை செலுத்தினார். நமது முதல் பிரதமர், சிறந்த அரசியல் மேதை, தொலைநோக்கு பார்வை கொண்டவர், அறிஞர், நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவர் என அவர் தனது டுவிட்டர் தளத்தில் புகழாரம் சூட்டியிருந்தார்.
Related Tags :
Next Story