அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் டெல்லி வந்தனர்


அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் டெல்லி வந்தனர்
x
தினத்தந்தி 20 Nov 2019 10:04 AM GMT (Updated: 20 Nov 2019 10:04 AM GMT)

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 150 இந்தியர்கள் இன்று காலை 6 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தனர்.

புதுடெல்லி,

விசா விதிகளை மீறியது அல்லது அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக ஊடுருவியது  தொடர்பான குற்றச்சாட்டுக்களில் சிக்கிய 150  இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 150 பேரும் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். வங்காளதேசம் வழியாக புதுடெல்லி விமான நிலையத்திற்கு இன்று காலை 6 மணிக்கு விமானம் வந்து சேர்ந்தது.  

விமான நிலையத்தில், 150 இந்தியர்களிடமும் குடியேற்ற துறை அதிகாரிகள் ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காலை 11 மணி முதல் ஒவ்வொருவராக வெளியில் அனுப்பப்பட்டு வருவதாக   விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி, அமெரிக்காவிற்குள் ஊடுருவும் நோக்கில் மெக்சிகோவிற்குள் சட்டவிரோதமாக சென்ற 300 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது நினைவிருக்கலாம். 

Next Story