நாடு தற்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது -ராஜ்நாத் சிங்


நாடு தற்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது -ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 23 Nov 2019 5:27 PM GMT (Updated: 23 Nov 2019 5:27 PM GMT)

நாடு தற்போது பாதுகாப்பான கரங்களில் இருப்பதாகவும், மோடி துணிச்சலான தலைவர் என்றும் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், “ பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தேசம் பாதுகாப்பாக உள்ளது. பிரதமர் மோடி நாட்டின் நலனுக்காக எத்தகைய முடிவுகளையும் எடுக்க தயங்க மாட்டார். நமது நாடு பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

அரசு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே பா.ஜனதா அரசியலில் ஈடுபடவில்லை. நாடு மற்றும் நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும், பாதுகாப்புக்காகவும் தான் அரசியலில் ஈடுபடுகிறது.

உலகில் முதலீட்டுக்கு உகந்த இடமாக இந்தியா திகழ்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும்போது, யார் வெளிநாட்டினர், யார் உள்நாட்டினர் என்பது தெரிய வரும். அதன்மூலம் நாட்டு மக்களுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை சரியாக முறையில் நடைமுறைப்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்.

Next Story