அனைத்து கட்சிகளையும் ஆளுநர் சமமாக நடத்த வேண்டும் - சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி


அனைத்து கட்சிகளையும் ஆளுநர் சமமாக நடத்த வேண்டும் - சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி
x
தினத்தந்தி 24 Nov 2019 5:43 AM GMT (Updated: 24 Nov 2019 5:43 AM GMT)

அனைத்து கட்சிகளையும் ஆளுநர் சமமாக நடத்த வேண்டும் என்று சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மும்பை, 

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ஆளுநர் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும்.  சரத்பவார் தேசியத் தலைவர்.

பாஜகவும், அஜித் பவாரும் ஆட்சி அமைக்க  எடுத்த முயற்சிகள் தவறானது.  எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக 165 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 

ராஜ்பவனுக்கு நேற்று தவறான ஆவணங்களை அஜித் பவார் எடுத்துச் சென்றுள்ளார். கவர்னர் உத்தரவிட்டால், இன்று கூட பெரும்பான்மையை காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்.  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 49 எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்” என்றார். 

Next Story