பாஜக வேட்பாளரை தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்
மேற்கு வங்காளத்தில் பாஜக வேட்பாளரை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
கொல்கத்தா
மேற்கு வங்காள மாநிலம் கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றது. இதில் கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளரான ஜாய் பிரகாஷ் மஜூம்தார், நாடியா மாவட்டத்தில் காரில் சென்றார்.
காரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வழிமறித்ததால், கீழே இறங்கினார். அப்போது எதிர்பாராத நேரத்தில் அவரை, செடி கொடிகளுக்குள் பிடித்து தள்ளிய திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை, காலால் எட்டி உதைத்தனர். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார்.
இதைக் கண்ட பாதுகாப்புப் படையினர் திரிணாமுல் காங்கிரசாரை விரட்டியடித்தனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story