நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்: காங். மூத்த தலைவர் டிகே சிவக்குமார்
கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டதை ஒப்புக்கொள்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டமன்றத்தில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க பாஜக குறைந்த பட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்று இருந்த நிலையில், 12 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதனால், எடியூரப்பா ஆட்சியை தக்க வைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
காங்கிரஸ் போட்டியிட்ட 12 தொகுதிகளில் 9 -ல் தோல்வியை நோக்கி செல்கிறது. இந்த நிலையில், தோல்வியை ஒப்புக்கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். துரோகிகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்றார்.
Related Tags :
Next Story