சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு 30 ஆண்டு ஜெயில்


சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு 30 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 14 Dec 2019 8:21 PM GMT (Updated: 14 Dec 2019 8:21 PM GMT)

ஆபாசமாக படமெடுத்து மிரட்டி, சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு 30 ஆண்டு ஜெயில் தண்டணை விதிக்கப்பட்டது.

பிலாஸ்பூர்,

சத்தீஸ்காரின் பிலாஸ்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தோர்வாவை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடந்த 2015-ம் ஆண்டு சிலர் ஆபாசமாக படமெடுத்தனர். பின்னர் அந்த படத்தை காட்டி மிரட்டியே அவரை தொடர்ந்து கற்பழித்து வந்தனர். இது குறித்து அந்த சிறுமி கடந்த 2017-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு மாவட்ட 3-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் குமார் தமக், குற்றவாளிகள் 4 பேருக்கும் 30 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் 3 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், மற்றொருவருக்கு ரூ.21 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story