டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு


டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 28 Jan 2020 9:15 PM GMT (Updated: 28 Jan 2020 8:29 PM GMT)

டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி. பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷகீன் பாக் பகுதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதில் பெண்கள், மாணவிகள், சிறார்கள், முதியோர் என அனைத்து தரப்பு வயதினரும் பங்கேற்று வருகின்றனர். இது, வருகிற 8-ந் தேதி டெல்லி மாநில சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

இப்போராட்டம் தொடர்பாக டெல்லி மேற்கு தொகுதி பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“பல லட்சக்கணக்கான மக்கள் அங்கே (ஷகீன் பாக்) கூடியிருக்கிறார்கள். இதுபற்றி டெல்லி நகரவாசிகள் நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். இந்த போராட்டக்காரர்கள், உங்களுடைய வீடுகளுக்குள் புகுந்து சகோதரிகளையும், மகள்களையும் கற்பழித்து கொன்று விடுவார்கள்” என்றார்.

அவர் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, “டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஷகீன் பாக் பகுதியில் ஒருவரைக் கூட உங்களால் பார்க்க முடியாது. அனைவரையும் விரட்டியடிப்போம்” என்று போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பர்வேஷ் வர்மாவின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.


Next Story