பிரதமரின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம்
பிரதமரின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாஸ்கர் குப்ளே, அமர்ஜீத் சின்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மந்திரிசபையின் நியமன குழு, இதற்கு ஒப்புதல் அளித்தது. இவர்களுக்கு செயலாளர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டு காலத்துக்கோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையிலோ ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஊழியர்கள் நியமனம் தொடர்பான மற்ற பணி வரன்முறைகளும் இவர்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இவர்களில், பாஸ்கர் குப்ளே, 1983-ம் ஆண்டின் மேற்கு வங்காள பிரிவை சேர்ந்தவர். சின்கா, பீகார் பிரிவை சேர்ந்தவர் ஆவார்.
பிரதமர் மோடியின் ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாஸ்கர் குப்ளே, அமர்ஜீத் சின்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மந்திரிசபையின் நியமன குழு, இதற்கு ஒப்புதல் அளித்தது. இவர்களுக்கு செயலாளர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டு காலத்துக்கோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையிலோ ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் ஊழியர்கள் நியமனம் தொடர்பான மற்ற பணி வரன்முறைகளும் இவர்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இவர்களில், பாஸ்கர் குப்ளே, 1983-ம் ஆண்டின் மேற்கு வங்காள பிரிவை சேர்ந்தவர். சின்கா, பீகார் பிரிவை சேர்ந்தவர் ஆவார்.
Related Tags :
Next Story