கொரோனா நிவாரண நிதிக்கு 3 மாத சம்பளத்தை அளித்த ஒடிசா முதல்-மந்திரி


கொரோனா நிவாரண நிதிக்கு 3 மாத சம்பளத்தை அளித்த ஒடிசா முதல்-மந்திரி
x
தினத்தந்தி 24 March 2020 9:25 PM GMT (Updated: 24 March 2020 9:25 PM GMT)

கொரோனா நிவாரண நிதிக்கு 3 மாத சம்பளத்தை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அளித்துள்ளார்.

புவனேஸ்வரம்,

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தனது 3 மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’நவீன் பட்நாயக் தனது 3 மாத சம்பளத்தை முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். கொரோனாவை தடுக்க, அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும்‘ என கூறப்பட்டுள்ளது.

Next Story