உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் மேலும் பேசிய பிரதமர் மோடி, “கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் தங்கள் சொந்த உயிருடன் விளையாடுகிறார்கள். கட்டுப்பாடுகள் மட்டுமே, இப்போதைக்கு நம் முன் இருக்கும் தீர்வு. ஊரடங்கை பலர் இன்னும் மீறுகிறார்கள். இது வருந்தத்தக்கது. உலகில் உள்ள பல மக்கள் இதே தவறுகளை தான் செய்தனர். சட்டத்தை, உத்தரவுகளை மீறுவது பலருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
கொரோனா மனித குலத்திற்கே சவாலான ஒன்று, கொரோனாவை முற்றிலும் ஒழிப்போம் என முழு நம்பிக்கை உள்ளது, பயப்பட வேண்டாம். 2020 செவிலியர்களுக்கான ஆண்டாக அமைந்து விட்டது, உங்களுடைய சேவைக்கு ஈடு இணையே இல்லை” என்றார். தொடர்ந்து, கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுடன் பிரதமர் உரையாடினார்.
Related Tags :
Next Story