மராட்டியத்தில் ஒரே நாளில் 1233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தில் ஒரே நாளில் 1233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 6 May 2020 3:39 PM GMT (Updated: 6 May 2020 3:39 PM GMT)

மராட்டியத்தில் ஒரே நாளில் 1233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புனே,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் இன்று புதிதாக 1,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,758 ஆக உயர்ந்துள்ளதாகவும் அம்மாநில மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

மேலும் வைரஸ் தொற்றுக்கு இன்று 34 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 651 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை அங்கு 1,90,879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளது. 

Next Story