கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் இன்று மேலும் 47-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில், இன்று ஒரே நாளில் கேரளாவில் 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 27 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்கள். 15 பேர் மராட்டியத்தில் இருந்தும் 9 பேர் தமிழகத்தில் இருந்தும், 5 பேர் குஜராத்தில் இருந்தும் வந்தவர்கள் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று அம்மாநிலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி தேர்வுகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story