இந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்


இந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்
x
தினத்தந்தி 29 May 2020 10:04 PM GMT (Updated: 29 May 2020 10:04 PM GMT)

இந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

புதுடெல்லி, 

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல்கட்டமாக கடந்த 7-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட பணி, கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதில், ஜூன் 4-ந் தேதி முதல் 6-ந் தேதிவரை, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுவீடன், ஜெர்மனி, தென்கொரியா ஆகிய 6 நாடுகளுக்கு கூடுதலாக மீட்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.

Next Story