டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
டெல்லியில் சி.ஆர்.பி.எப். வீரர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் 44 வயதுடைய மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார். அவருக்கு சிறுநீரக வியாதி இருந்துள்ளது. இதுவரை சி.ஆர்.பி.எப். வீரர்களில் 1,046 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8 பேர் பலியாகி உள்ளனர் என சி.ஆர்.பி.எப். தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
Related Tags :
Next Story