டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 2,948 பேருக்கு தொற்று உறுதி


டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 2,948 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 Jun 2020 2:09 PM GMT (Updated: 27 Jun 2020 2:09 PM GMT)

டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  நாட்டில் முதல் இடத்தில் உள்ள மராட்டியத்திற்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது.  டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு வருகிறது.  இதேபோன்று பலி எண்ணிக்கையும் டெல்லியில் உயர்ந்து உள்ளது.  

இந்த நிலையில், டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்து 188 ஆக உயர்ந்து உள்ளது.  இன்று 66 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால், பலி எண்ணிக்கை 2,558 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 2,210 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.  28,329 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story