தாராவியில் அதிரடியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி


தாராவியில் அதிரடியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 30 Jun 2020 2:31 PM GMT (Updated: 30 Jun 2020 2:31 PM GMT)

தாராவியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாராவி,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நுழைந்த கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வருகிறது.

நேற்றுவரை தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,262 ஆக இருந்தது.

இந்நிலையில், இன்று தாராவியில் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதி செய்து அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 268 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story