தானே மாவட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் 31-ந் தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு


தானே மாவட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் 31-ந் தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு
x
தினத்தந்தி 2 Aug 2020 11:47 AM GMT (Updated: 2 Aug 2020 11:47 AM GMT)

தானேமாவட்டத்தில் உள்ளகட்டுப்பாட்டு பகுதிகளில் வருகிற 31-ந் தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

தானே,

தானே மாவட்டத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வில்லா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் வருகிற 31-ந் தேதி வரை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வு இல்லாத ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேகர் கூறுகையில், “ கட்டுப்பாட்டு மண்டலங்கள் இல்லாத பகுதிகளில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படுகிறது. மாநில அரசின் வழிகாட்டுதல்கள் தானே புறநகர், நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கும் பொருந்தும். கட்டுப்பாட்டு பகுதிகள் என கண்டறியப்பட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்கள், டவுண் பகுதிகளில் 31-ந் தேதி வரை ஊரடங்கு தொடரும் ” என்றார்.

இதற்கிடையே தானே மஜிவாடா-மான்பாடா பகுதியில் 132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி துணை கமிஷனர் சந்தீப் மாலவி கூறினார். இதில் 86 பேர் அங்குள்ள கட்டுமான பணிகள் நடந்து வரும் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் ஆவர்.

Next Story