ஆந்திராவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்: மேலும் 10,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திராவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்: மேலும் 10,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 7 Aug 2020 6:12 PM GMT (Updated: 7 Aug 2020 6:12 PM GMT)

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாகவே உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மேலும் 10,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,06,960 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 89 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 1,842 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 7,594 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,20,464 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு 84,654 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

Next Story