தெலுங்கானாவில் இன்று மேலும் 1,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தெலுங்கானாவில் இன்று மேலும் 1,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 Aug 2020 9:44 AM GMT (Updated: 16 Aug 2020 9:44 AM GMT)

தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. 

தெலுங்கானாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 1,269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 91,361 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தில் இன்று மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 693 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரேநாளில் 1,930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 68,126  ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 22,542 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story