கர்நாடகாவில் மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது


கர்நாடகாவில் மங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2020 3:31 AM GMT (Updated: 20 Aug 2020 3:31 AM GMT)

கர்நாடகாவில் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு உள்ளது என புரளி ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு,

கர்நாடகாவில் உள்ள மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என மங்களூரு நகர போலீசாரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனால் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.  இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.  இதனால், தொலைபேசியில் பேசியது புரளி என்று விசாரணையில் தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து வெடிகுண்டு புரளி ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.  இதுபற்றி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story