தெலுங்கானா ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து; 9 பேர் கதி என்ன?


தெலுங்கானா ஸ்ரீசைலம் அணையின் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து; 9 பேர் கதி என்ன?
x
தினத்தந்தி 21 Aug 2020 3:19 AM GMT (Updated: 21 Aug 2020 3:19 AM GMT)

தெலுங்கானாவில் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது.  இதில் பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து  தீ விபத்தும் ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து கர்னூல் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியுள்ளது.  இதுவரை தீ விபத்தில் சிக்கியிருந்த 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 6 பேர் ஸ்ரீசைலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  தீ விபத்தில் சிக்கியுள்ள 9 பேரை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Next Story