மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது
மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் வாகீத்-உர்-ரஹ்மான் பர்ரா கைது செய்யபட்டார்.
புதுடெல்லி
மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் வாகீத்-உர்-ரஹ்மான் பர்ராவை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று கைது செய்தது.
சமீபத்தில் தான் அவர் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். இந்த நிலையில் என்.ஐ.ஏ தனது புதுடெல்லி அலுவலகத்தில் இரண்டு நாட்கள் விசாரணைக்கு அழைத்தது. அடுத்து பர்ரா கைது செய்யப்பட்டார். பர்ரா மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறிப்பிடப்படவில்லை.
இதுகுறித்து மெஹ்பூபா வாகீதின் நேர்மை, நேர்மை மற்றும் தன்மை குறித்து நான் தனிப்பட்ட முறையில் உறுதியளிக்க முடியும். நீதியை வழங்குவதும், வாகீத் விரைவில் விடுவிக்கப்படுவதும் இப்போது நீதித்துறையிடம் உள்ளது என்று டுவீட் செய்துள்ளார்.
Related Tags :
Next Story