அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்


அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 16 Dec 2020 4:53 PM GMT (Updated: 16 Dec 2020 4:53 PM GMT)

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இடாநகர்,

அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி பகுதியில் இன்று இரவு 8.10 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.1 ஆக பதிவாகி உள்ளது.

இதனை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


Next Story