இமாசல பிரதேசத்தில் வரும் பிப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு
இமாசல பிரதேசத்தில் வரும் பிப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சிம்லா,
கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், இமாசல பிரதேசத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் பகுதியளவில் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இமாசல பிரதேசத்தில் 5, 8 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 15 முதல் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story