இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 13,788 பேருக்கு தொற்று உறுதி


இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 13,788 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 18 Jan 2021 4:13 AM GMT (Updated: 18 Jan 2021 4:13 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,71,773 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,52,419 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 14,457 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,11,342 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 2,08,012 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story