பஞ்சாபில் வரும் 21 ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அறிவிப்பு


பஞ்சாபில் வரும் 21 ஆம் தேதி முதல்  பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2021 4:17 PM GMT (Updated: 18 Jan 2021 4:17 PM GMT)

பஞ்சாபில் வரும் 21 ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

அமிர்தசரஸ்,

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் படிபடியாக தளர்த்தப்பட்டன. கல்வி நிலையங்களும் கொரோனா பாதிப்பு குறைவை பொருத்து மாநில அரசுகளே முடிவெடுத்து திறந்து வருகிறன்றன. 

அந்த வகையில், பஞ்சாபில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஜனவரி 21ஆம் தேதி முதல் திறப்பதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது.பஞ்சாப் மாநிலத்தில் 5 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 7 ஆம் தேதி முதலே பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story