பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது -மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
புதுடெல்லி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் மெய்நிகர் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது:-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது மற்றும் உலகளாவிய மனித உரிமைகளுக்கு கடுமையான சவாலாக உள்ளது.இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் மிக அடிப்படையான மனித உரிமையை மீறுகிறது.. நீண்டகாலமாக பாதிக்கப்பட்டதாக பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது
கொரோனா தொற்றுநோய் உலகின் பல பிராந்தியங்களில் நிலைமையை சிக்கலாக்கியுள்ளது, இந்த சவால்களை சமாளிக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது.
மனித உரிமைகளை கையாளும் அமைப்புகள் உட்பட, பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது, அல்லது அதன் குற்றவாளிகள் அதன் பாதிக்கப்பட்டவர்களுடன் சமன் செய்யப்படுவதில்லை என்பது போன்ற தெளிவான உணர்தல் இருக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும்.
பயங்கரவாதத்தை கையாள்வதற்கான எட்டு அம்ச செயல் திட்டத்தை கடந்த மாதம் ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு இந்தியா வழங்கியது.இந்த திட்டத்தை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற உறுப்பினர்களுடன் இந்தியா தொடர்ந்து செயல்படும்.
அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கொரோனா தொற்றை கையாள்வதற்கான அதன் திட்டமிடுதலிலும் பிரதிபலிக்கிறது.
ஊரடங்கு காலத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு நேரடி உணவு , 40 கோடி பேருக்கு நிதி உதவி திறம்பட வழங்கப்பட்டு உள்ளது.
தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியா 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்கி உள்ளது.அதே மனப்பான்மையில், தடுப்பூசிகளை அனைவருக்கும் மலிவு விலையிலும் வழங்குவதற்காக இந்தியா தனது தடுப்பூசி உற்பத்தி திறனைப் பயன்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.
வங்காள தேசத்தில் இருந்து பிரேசில் வரையிலும், மொராக்கோவிலிருந்து பிஜி வரையிலும், உலகின் மருந்தகம் இன்று 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு லட்சக்கணக்கான தடுப்பூசி மருந்துகளை வழங்கி வருகிறது.
நிலையான வளர்ச்சி உள்பட மக்களின் அடிப்படை மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என கூறினார்.
Related Tags :
Next Story