மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் கிளையில் நாளை முதல் நேரடி விசாரணை நிறுத்தம்


மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் கிளையில் நாளை முதல் நேரடி விசாரணை நிறுத்தம்
x
தினத்தந்தி 20 March 2021 8:06 PM GMT (Updated: 20 March 2021 8:06 PM GMT)

கொரோனா பரவல் காரணமாக மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் கிளையில் நாளை முதல் நேரடி விசாரணை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவில் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் கிளை நேரடி விசாரணையை நிறுத்தி உள்ளது. 

இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவாளர் வெளியிட்டுள்ள நோட்டீசில், அவுரங்காபாத் கிளையில் திங்கட்கிழமை (நாளை) முதல் ஏப்ரல் 4 -ந் தேதி வரை நேரடி விசாரணை நடைபெறாது என தெரிவித்து உள்ளது. மேலும் இந்த காலத்தில் நடைபெற இருந்த வழக்கு விசாரணை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கோர்ட்டுகளில் நேரடி விசாரணை தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story