மத்திய பிரதேசத்தில் ஆட்டோ மீது பஸ் மோதி 12 பெண்கள் உள்பட 13 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் 12 பெண்கள் உள்பட 13 பேர் பலியானார்கள்
குவாலியர்
மத்திய பிரதேசத்தின் குவாலியரில் இன்று காலை வேகமாக வந்த பேருந்து ஆட்டோமீது மீது மோதியதில் 12 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் பலியானார்கள்,
மத்திய பிரதேசம் குவாலியரின் பழைய சாவ்னி பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் சமையல்காரர்களாக வேலை பார்த்த பெண்கள் வேலை முடிந்து ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது குவாலியரில் இருந்தது மொரோனா என்ற பகுதிக்கு சென்று கொண்டு இருந்த பஸ் ஆட்டோ மீது மோதியது இதில் 12 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் பலியானார்கள்.
8 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்கள் .பேருந்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ .50,000 வழங்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
State Government to give Rs 4 lakh each to the family of the deceased and Rs 50,000 to injured: Madhya Pradesh CM Shivraj Singh Chouhan (File photo) pic.twitter.com/47S656knOW
— ANI (@ANI) March 23, 2021
Related Tags :
Next Story