பஞ்சாபில் புதிதாக 2,820- பேருக்கு கொரோனா


பஞ்சாபில் புதிதாக 2,820- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 March 2021 6:23 PM GMT (Updated: 27 March 2021 6:23 PM GMT)

பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 2,820- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ்,

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,820- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,141- பேர் இன்று குணம் அடைந்துள்ள நிலையில், 46 பேர் உயிரிழந்துள்ளனர். 

பஞ்சாப்பில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 864- ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,98 ஆயிரத்து 972- ஆக இருக்கிறது. தொற்று பாதிப்புடன் 23 ஆயிரத்து 271- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story