மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டத்தில் நடத்த வேண்டும்; திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டத்தில் நடத்த வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. நாளை 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் ஜல்பைகுரி, கலிம்போங், டார்ஜிலிங், நாடியா, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் புர்பா வர்தமான் ஆகிய 6 மாவட்டங்களில் நடக்கிறது. மேற்கு வங்காளத்தில் 5வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த புதன்கிழமை மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
கொரோனா பாதிப்பு உயர்வால் மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள தேர்தல்களை ஒன்றாக நடத்த கூடும் என கூறப்பட்டது. ஆனால், 8 கட்ட தேர்தலில் மீதமுள்ள தேர்தல்களை ஒன்றாக நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தெரீக் ஓ பிரையன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டத்தில் நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இந்த விசயத்தில் பா.ஜ.க. தங்களது நிலை பற்றி தெளிவுப்படுத்த வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன். முதலில் கொரோனா பெருந்தொற்றை கையாள வேண்டியதே முக்கியம். அரசியல் இரண்டாவது விசயம் என்பதில் எங்களுடன் அவர்கள் ஒத்து போகின்றார்களா? என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தெரீக் ஓ பிரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story