தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே ஓய்வு பெற்றார்; “திருப்தியுடன் வெளியேறுகிறேன்” என பேச்சு + "||" + Supreme Court Chief Justice SA Bobde retires

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே ஓய்வு பெற்றார்; “திருப்தியுடன் வெளியேறுகிறேன்” என பேச்சு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே ஓய்வு பெற்றார்; “திருப்தியுடன் வெளியேறுகிறேன்” என பேச்சு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஓய்வு பெற்றார். என்னால் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்ட திருப்தியுடன் வெளியேறுகிறேன் என அவர் கூறினார்.
போப்டே ஓய்வு
சுப்ரீம் கோர்ட்டின் 47-வது தலைமை நீதிபதியாக கடந்த 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 18-ந்தேதி பதவி ஏற்றவர், எஸ்.ஏ.போப்டே.அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் வழக்கு விசாரணையை காணொலி காட்சி வழியாக நடத்தினார். இதுவரை இல்லாத வகையில் இது நடந்தது.நேற்று அவர் பணி நிறைவு செய்து, ஓய்வு பெற்றார்.

கடைசிநாளில் கலவையான உணர்வுகள்...

இதையொட்டி அவர் நேற்று கூறியதாவது:-

இந்த கடைசி நாள் எனக்கு கலவையான உணர்வுகளைத் தூண்டுகிறது. இதை விவரித்து சொல்வது கடினம்.21 ஆண்டு காலம் நான் நீதிபதியாக இருந்து ஓய்வு பெறுகிறேன். சுப்ரீம் கோர்ட்டில் எனக்கு மிக செழுமையான அனுபவங்கள் வாய்த்தன. சகோதர நீதிபதிகளுடனான நட்புறவு அருமையாக அமைந்தது.நான் இந்த கோர்ட்டை விட்டு மகிழ்ச்சியுடனும், அற்புதமான வாதங்களின் நினைவுகளுடன், நல்ல நடத்தையுடன், நீதிக்கான உறுதிப்பாட்டுடன் நல்லெண்ணத்துடன் வெளியேறுகிறேன்.

திருப்தி
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், காணொலி காட்சி வழியாக நீதிமன்ற விசாரணைகளை நடத்தியது, பதிவு செய்தலின்றி சாத்தியப்பட்டிருக்காது.நான் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்ட திருப்தியுடன் வெளியே செல்கிறேன். இந்த கோர்ட்டை என்.வி.ரமணா நன்றாக வழிநடத்துவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புகழாரம்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவிக்காலம் குறைந்தது 3 ஆண்டுகளாவது இருக்க வேண்டும் என்ற கருத்தை அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வெளியிட்டார்.சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், “தலைமை நீதிபதி போப்டே, ஒரு புத்திசாலித்தனமான நீதிபதியாக மட்டுமின்றி அற்புதமான நகைச்சுவை உணர்வைக்கொண்ட அன்பானவராக, அக்கறையுள்ள மனிதராகவும் அறியப்படுவார்” என புகழாரம் சூட்டினார்.

சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தலைவர் மூத்த வக்கீல் விகாஸ் சிங் பேசுகையில், “இது (65) ஓய்வு பெறும் வயதே இல்லை. நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும்” என்ற வேண்டுகோளை விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும்: சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? மத்திய அரசிடம், சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கொரோனா வைரஸ் 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், அதை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசிடம், சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
2. 18-45 வயதுடைய 59 கோடி பேருக்கு செலுத்த 122 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
நாட்டில் 18-45 வயதுடைய 59 கோடி பேருக்கு செலுத்த 122 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. சுப்ரீம் கோர்ட்டின் கேள்விகளுக்கு மத்திய அரசு எப்படி பதில் அளிக்கிறது என்று பார்ப்போம்? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
4. கொரோனா சூழல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோடை விடுமுறை
அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று தனது முதல் பணி நாளில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
5. இத்தாலிய கப்பல் வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு இழப்பீடு எங்கே? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
இத்தாலிய கப்பல் பாதுகாப்பு வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு இத்தாலி வழங்கிய இழப்பீடு எங்கே என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.