கர்நாடகாவில் மேலும் 9,808- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,808- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,808- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 23,449- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக 179- பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரமாக உள்ளது.
கர்நாடகாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 17 ஆயிரத்து 289- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 60 ஆயிரத்து 165- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32,099- ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story