மராட்டியத்தில் 21 பேருக்கு ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் 21 பேருக்கு  ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 4:39 PM GMT (Updated: 21 Jun 2021 4:39 PM GMT)

இந்த டெல்டா வைரஸ் உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ், ‘டெல்டா பிளஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

மும்பை, 

இந்தியாவில் கொரோனாவின் மாறுபாடு வகையான டெல்டா கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2-வது அலை மிகக்கடுமையான பாதிப்பு ஏற்படுத்த டெல்டா வகை கொரோனா வைரசே காரணமாக சொல்லப்பட்டது. தற்போது 2-வது அலை பரவல் தணியத்தொடங்கியுள்ள நிலையில், டெல்டா பிளஸ் வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

 புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது.  இந்த நிலையில், மராட்டியத்தில் 21 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். 

Next Story