கெஜ்ரிவாலின் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம்: பஞ்சாப் மந்திரி


கெஜ்ரிவாலின் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம்:  பஞ்சாப் மந்திரி
x
தினத்தந்தி 29 Jun 2021 5:43 PM GMT (Updated: 29 Jun 2021 5:43 PM GMT)

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் 300 யூனிட் இலவச மின்சார அறிவிப்பு மக்களை முட்டாளாக்கும் நாடகம் என பஞ்சாப் மந்திரி கூறியுள்ளார்.


அமிர்தசரஸ்,

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பஞ்சாப்பில் இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, பஞ்சாப் மக்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டார்.

இதுபற்றி பஞ்சாப் மந்திரி சரண்ஜித் சிங் கூறும்போது, எங்களுடைய அரசு மாநில மக்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் பற்றி அறிவித்த பின்பு, டெல்லியில் இருந்து அவர் வந்து அறிவிக்கிறார்.

கெஜ்ரிவாலின் அறிவிப்பு பஞ்சாப் மக்களை முட்டாளாக்கும் நாடகம்.  இது அவருக்கு உதவாது.  5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தோல்வி போல் மீண்டும் தோல்வியே அடைவார் என்று கூறியுள்ளார்.


Next Story