பிரதமர் மோடியுடன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் சந்திப்பு
டெல்லி சென்றுள்ள கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி,
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற பினராயி விஜயன் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினேன். இந்த சந்திப்பு பலனுள்ள வகையில் இருந்தது. கேரளாவின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதித்தோம்.
முழுமையான ஆதரவு அளிக்கப்படும் என உறுதி அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை பினராயி விஜயன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story